மது அருந்த முடியாத ஏக்கத்தில், மனைவி, மகள், மகனை விட்டு எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியை சார்ந்தவர் வீரபத்திரன் (வயது 37). இவர் சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் வெல்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான வீரபத்திரன் மது அருந்த இயலாமல் தவித்து வந்துள்ளார். இதனால் கடும் விரக்திக்கும் உள்ளாகி இருந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் செய்வதறியாது திகைத்து வந்த நிலையில், அங்குள்ள மாட்டுமந்தை மேம்பாலத்திற்கு சென்று பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரை படுகாயத்துடன் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வீரபத்திரன் பலியாகியுள்ளார். 

இந்த விஷயம் குறித்து திருவெற்றியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வீரபத்திரனுக்கு மனைவி, மகன், மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man attempt suicide due to could not drink liquor alcohol India curfew


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->