வீட்டில் குழந்தைகளை வச்சுக்கிட்டு இப்படியா பண்றது?! குமாரை கும்மிய போலீஸ்!!
man arrested for sharing porn videos
தமிழகம் முழுவதும் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்பவர்கள் மீதும், அதனை மற்றவர்களுக்கு பரப்புவார்கள் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது மதுரை பகுதியில் ஒருவர் ஆபாச படங்களை டவுன்லோட் செய்து அதை மற்றவர்களுக்கு பரப்பி வருவதாக தகவல் வந்துள்ளது.
இது தொடர்ந்து மதுரை அனைத்து மகளிர் போலீசார் இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து ஆரப்பாளையம் எனும் பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஆரப்பாளையத்தில் வசித்து வந்த குமார் என்பவர் தான் அவரது கைபேசி மூலம் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதனை சமூக வலைதளம் மற்றும் அதனை அவரது நண்பர்களுக்கு அனுப்பி வருவது தெரிய வந்துள்ளது.
இதனால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியது. அப்போது அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும், மதுரையில் இருக்கும் லாரி புக்கிங் கம்பெனியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசியில் ஆபாச படங்கள் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படம், வீடியோக்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அவற்றை அவர் பத்திற்கும் மேற்பட்ட அவரது நண்பர்களுக்கு பகிர்ந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for sharing porn videos