12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை... காமகொடூரன் மீது பாய்ந்தது போக்சோ..!
Man arrested for sexually abusing 12th class student
+2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட மேஸ்திரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த பெண் அந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரின் மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கட்டிட மேஸ்திரியான மணிகண்டனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அந்த மாணவியை மேஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அதன்பின் அந்த மாணவியை சினிமாவிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து, அந்த மாணவி மயக்கம் வருவதாக கூறியுள்ளார். இதனால், அந்த மாணவியை அருகில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.
விடுதிக்கு சென்ற பின் அந்த மாணவி மயக்கநிலையில் இருந்த போது சிறிய பெண் என்றும் பாராமல் அவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வீட்டிற்கு வந்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைமேற்கொண்ட காவல்துறையினர் மேஸ்திரியை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man arrested for sexually abusing 12th class student