தேனி.! சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 15 பேர் கைது.!
Man arrested for selling liquor illegally in theni
தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள வருசநாடு கண்டமனூர், மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 150 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதைதொடர்ந்து இதே போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Man arrested for selling liquor illegally in theni