ஈரோட்டில் ஒரு பொள்ளாச்சி.. கதறும் கல்லூரி மாணவிகள் - வீடியோ காட்டியே சூறையாடப்பட்ட பல பெண்களின் கற்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்திருந்த புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், நான் கல்லூரியில் படித்து வந்தபோது ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 37) என்பவர் பழக்கமானார்.

அவர் தன்னை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதை அவர் தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்டு இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் நான் 2 முறை கர்ப்பமானேன். முதல் முறை கர்ப்பமானபோது மருத்துவமனைக்கும் 2ஆவது முறை மாத்திரை கொடுத்தும் ராதாகிருஷ்ணன் கருக்கலைப்பு செய்ய வைத்தார்.

மேலும் அவர் என்னுடைய தோழிகளின் செல்போன் எண்ணை என்னுடைய செல்போனில் இருந்து எடுத்துக்கொண்டு அவர்களையும் என்னை போல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு தெரிந்த நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் செயல்பாடுகளில் மாற்றத்தை கவனித்த அவரது, பெற்றோர் இது குறித்து கேட்டனர்.

தனது பெற்றோரிடம் நடந்த உண்மையை மாணவி கூற, அவரது பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவங்களையடுத்து, ஈரோட்டிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man-arrested-for-abuse-collage-girl-in-erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->