எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


எரிந்த நிலையில் குப்பை தொட்டியில் கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கிராமத்தில் குப்பை தொட்டியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. அதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

 விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர் மேலும் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த நபரை கடுமையாக தாக்கி கொலை செய்து குப்பைத் தொட்டியில் போட்டு தீவைத்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த நபர் யார் என தெரிந்தால் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் என்ற முழு விபரங்கள் தெரியவரும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Male corpse found burnt in theni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->