மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை.! மதுரையில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


அன்பு மனைவி தன்னை பிரிந்து தாயாரின் வீட்டிற்கு சென்ற சோகம் தாளாது கணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஆலங்குளம் பகுதியை சார்ந்தவர் தீபக் (வயது 23). இவரது மனைவி ரேஷ்மா (வயது 21). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து, மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். 

கணவன் - மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரியவருகிறது. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ரேஷ்மா, தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை பிரிந்த வருத்தம் தீபக்கை வெகுவாக வாட்டியுள்ளது. 

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த தீபக், விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, காவல் துறையினர் தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Youngster Suicide and Died due to Wife Went Her Mother House due to Fight


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->