#Breaking: காதல் திருமணம் செய்தவர், பெண் வீட்டாரின் புகாரின் பேரில் அடித்து கொலை?.. மதுரையில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் பிணமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியை சார்ந்தவர் ரமேஷ். இவரை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில், இன்று தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே, இளைஞரின் இறப்பு செய்தியை அறிந்த உறவினர்கள் மொத்தமாக திரண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்ததும் புறப்பட்டு சென்ற மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித், இளைஞரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், ரமேஷ் காதலித்து வந்த பெண்மணியை, கடந்த மாதம் காதல் திருமணம் செய்துள்ளார். 

பெண்ணின் பெற்றோர்களின் புகாரின் பேரில் ரமேஷ் மற்றும் அவரது சகோதரரை காவல் துறையினர் அடிக்கடி விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், நேற்று இரவும் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

இதன்பின்னரே ரமேஷ் மறுநாள் காலையில் அங்குள்ள வாழைத்தோப்பு பகுதியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai youngster Mystery Murder When going to Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->