முகாமில் இருந்து தப்பி சென்று திருமணம் செய்த வாலிபர்.. பரபரப்பு வாக்குமூலம்.. அலர்ட் செய்த சுகாதாரத்துறை.!!
madurai youngster escape from corona isolation ward and married love girl
துபாய்க்கு பணிக்கு சென்ற நபர் கடந்த 23 ஆம் தேதி விமானத்தில் மதுரைக்கு வந்துள்ளனர். இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்த பின்னர், பெருங்குடி அருகேயுள்ள சின்னஉடைப்பு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு முகாமில் தங்க வைத்துள்ளார். இந்த நால்வரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியை சார்ந்த 23 வயதுடைய வாலிபரும் ஒருவராவார்.
இந்நிலையில், வாலிபர் திடீரென மாயமாகவே, அப்பகுதி முழுவதும் தேடி காணவில்லை. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, தனிப்படை அமைத்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, வாலிபரின் உறவினர்களை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், வாலிபர் பெண்ணை காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணை பார்க்க முகாமில் இருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த பெண்ணின் உறவினர்கள் சுதாரித்துக்கொண்டு, வாலிபருக்கு - பெண்ணிற்கும் உறவினர்கள் முன்னிலையில் நள்ளிரவு நேரத்தில் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இதனை அறிந்த காவல் துறையினர் வாலிபரை கைது செய்து மீண்டும் முகாமிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வாலிபரின் வாக்குமூலத்தை தெரிவித்துள்ளனர்.
முகாமில் இருந்து தப்பிய வாலிபர் மதுரை ரிங் ரோடு பகுதிக்கு வந்தடைந்த நிலையில், பேருந்துகள் இயங்காததால் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிள் மூலமாக ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் காதலியை திருமணமும் செய்துள்ள நிலையில், இவர் யார்? யாரை சந்தித்தார் என்பது தொடர்பான விபரம் சேகரிக்கப்பட்டு, தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவருக்கு கரோனா அறிகுறி இல்லாத நிலையில், சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவித்தனர்.
மேலும், இன்று வாலிபரின் தாயார் முகாமில் இருந்து வந்து தன்னையும், தனது மகளையும் அடித்து துன்புறுத்தியதாக வாலிபரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
madurai youngster escape from corona isolation ward and married love girl