நாங்கதான்..! அறிவிப்புக்கு முன்னரே ஆட்பறித்து செயல்பட்ட உடான்ஸ்பிறப்புகளால் சர்ச்சை.!!
Madurai West and Sholavandan DMK Candidate make poster Before TN Election Result Create Controversy
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி 234 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தலானது நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மே மாதம் 2 ஆம் தேதியான நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்நிலையில், திமுகவினர் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னே வெற்றி பெற்றுவிட்டதாக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோர் வெற்றி பெற்றுவிட்டதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் மதுரை கிழக்கு தொகுதி மற்றும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai West and Sholavandan DMK Candidate make poster Before TN Election Result Create Controversy