தோட்டத்திற்கு சென்ற பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. கண்ணீரில் பெற்றோர்கள்..!!
Madurai Usilampatti girl suicide police investigation
உசிலம்பட்டியில் திருமணம் நடைபெறவிருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி துரைசாமிபுதூர் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீனிவாசன்.
இவரது மகளின் பெயர் சினேகா. சினேகாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வரன் பறிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த வாரம் வியாழக்கிழமை திருமணம் நடைபெற நிச்சயம் செய்து தேதிகள் குறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று உசிலம்பட்டியில் இருக்கும் தனது தோட்டத்திற்கு சென்ற சினேகா, அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரின் உடலைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Usilampatti girl suicide police investigation