உசிலம்பட்டி: 7 நாட்களே ஆகிய குழந்தை கொலை?.. காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


பிறந்து ஏழு நாட்களே ஆகிய பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்ததில் இருக்கும் மர்மம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கே.பாறைப்பட்டி பகுதியை சார்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சிவபிரிங்கா. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 8 வயதுடைய மாற்றும் 3 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், சிவப்பிரியங்காவிற்கு கடந்த 10 ஆம் தேதி பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வீட்டிற்கு வந்துள்ளனர். 

இதன்போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருப்பதாக கூறி, நள்ளிரவு நேரத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டது என தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாது, குழந்தையின் முகத்தில் காயங்கள் இருப்பதை கண்ட மருத்துவர், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Usilampatti Child baby Murder Mystery Police Investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->