கார் முன்பக்க டயர் வெடித்து சோகம்.. 3 பெண்கள் உட்பட 5 பேர் பலியான பரிதாபம்.!
Madurai Tirunelveli By Pass Road Accident Police Investigation 28 April 2021
காரின் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியை சார்ந்தவர் அபுபக்கர். இவர் பிரசவத்திற்காக வந்திருந்த தனது மூத்த மகளை, கணவர் வீட்டில் கொண்டு சென்று விடுவதற்காக வேனில் சிவகாசிக்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.
இதன் போது, அங்குள்ள கள்ளிக்குடி அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், விருதுநகரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஹோண்டாய் காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பை தாண்டி, எதிரே வந்த ஆம்னி வேன் மீது மோதியது.
காரும் - வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இருந்து வாகனங்களும் அப்பளம் போல நொறுங்கி நிலையில், வாகனத்தில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், காயமடைந்த ஏழு மாத குழந்தை உட்பட இருவர் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Tirunelveli By Pass Road Accident Police Investigation 28 April 2021