ரூ.20 ஆயிரம் மானியம் வந்திருப்பதாக ஏமாற்றி ரூ.80 ஆயிரம் திருட்டு.. வங்கியிலேயே நடந்த பகல்கொள்ளை.!
Madurai Thirumangalam Woman Money Stolen by Thief at Bank Police Investigation
நூதன முறையில் பெண்ணிடம் ரூ.80 ஆயிரம் வங்கியில் வைத்து ஏமாற்றி பறித்து செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், ஓ. ஆலங்குளம் பகுதியை சார்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). இவரது மனைவி முத்துமாரி (வயது 39). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் கடந்த சில மாதத்திற்கு முன்னதாக நகையை அடகு வைத்திருக்கிறார்.
இந்த நகையை திருப்ப நேற்று மதியம் 2 மணியளவில் கணவருடன் முத்துமாரி வங்கிக்கு சென்ற நிலையில், வங்கியில் பணத்தை வைத்துக்கொண்டு படிவத்தை பூர்த்தி செய்ய இயலாமல் இருந்துள்ளார். இதன்போது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர், அவருக்கு உதவி செய்வது போல பேசியுள்ளார்.
பின்னர், அவரிடம் பேச்சுக்கொடுத்தபடியே முத்துமாரியின் ரூ.80 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்ட நிலையில், உங்களுக்கு வங்கியில் ரூ.20 ஆயிரம் மானியம் உள்ளது. இதற்கு கடிதம் எழுத வேண்டும் என்று கூறி, வெள்ளை பேப்பர் மற்றும் ஸ்டாம்ப் வாங்கி வர கூறியுள்ளார்.
முத்துமாரி வெளியே சென்று வெள்ளை பேப்பர் மற்றும் ஸ்டாம்ப் வாங்கி வந்த நிலையில், ரூ.80 ஆயிரத்தை வாங்கிய வாலிபர் மாயமாகியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய முத்துமாரி கூச்சலிடவே, வங்கி அதிகாரி விபரத்தை கேட்டறிந்து கண்காணிப்பு கேமிராவை சோதனை செய்துள்ளனர்.
சோதனையில், முகக்கவசம் அணிந்து வந்த வாலிபர் கேமராவில் சிக்காமல் பின்புறம் திரும்பியவாறு இருந்துள்ளார். இதனால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தவே, முத்துமாரி சார்பில் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வங்கிக்கு செல்லும் பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணத்தை கொடுக்க வேண்டாம். உங்களின் கவனத்திலேயே பணத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Thirumangalam Woman Money Stolen by Thief at Bank Police Investigation