மனைவி இறந்த சோகத்தில், மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்! சொத்துக்களை யாருக்கு எழுதி வைத்தார் தெரியுமா!!
madurai sucide
மதுரை எஸ்.எஸ்.காலனியில் வசித்து வந்த கார்த்திகேயன் இவரது மனைவி பாரதிக்கு கடந்த 6 ஆண்டுகளாக வாதநோய் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கண்பார்வை நோய் ஏற்பட்டதால் கணவர் கார்த்திகேயன் மனைவியை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கவனித்து வந்துள்ளார்.
கார்த்திகேயன் மற்றும் சபா தம்பதியர்களுக்கு 14 வயதுடைய சபா என்ற மாற்றுத்திறனாளி மகனும் இருந்தார். உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார், மனைவியின் உயிரயிழப்பால் மிகுந்த வேதனை அடைந்த கார்த்திகேயன் தனது மாற்றுத் திறனாளி மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு.
பின்பு தனக்கு உள்ள சொத்துக்களை எல்லாம் ஏழைகளுக்கு வழங்குமாறு கடிதம் எழுதி வைத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டிலிருந்த கார்த்திகேயன் மற்றுன் அவரது மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெறவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.