ரூ.6 க்கு துணிமணி.. பொதுமக்கள் திரண்டதால் "மணி"யை பெனால்டியாக வாங்கிய அதிகாரிகள்.!
Madurai SS Colony Dress Shop Offer Municipal Officers Penalty to Shop Owner
ரூ.6 க்கு துணிகள் என்ற சலுகை அளிக்கப்பட்டதை நம்பி, கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை காற்றில் மக்கள் பறக்கவிட்டனர். இதனால் சம்பந்தப்பட்ட கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
மதுரை நகரில் உள்ள எஸ்.எஸ் காலனி பகுதியில் துணிக்கடையொன்று புதிதாக கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் திறப்பை முன்னிட்டு, கடை நிர்வாகம் கடையை பிரபலப்படுத்த திட்டம் தீட்டியுள்ளது.
இதனையடுத்து, முதலோடு முதலாக கூடுதல் பணத்தை செலவழித்து, ரூ.6 க்கு துணிகள், திறப்பு விழா நடைபெறும் நேற்றைய தினம் மட்டும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து விளம்பரங்கள் தந்துள்ளது.
இதனைக்கண்டு பெரும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகிய மக்கள், ரூ.6 க்கு துணிகளா? என்று ஆசைப்பட்டு கடையில் குவிந்தனர். கடையை விட்டு வெளியேவும் மக்கள் வரிசையாக காத்திருந்த நிலையில், கொரோனா பரவல் விதிமுறைகள் மக்கள் மற்றும் கடை நிர்வாகத்தால் காற்றில் பறக்க விடப்பட்டது.
இந்த தகவல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் கடையின் உரிமையாளரை கண்டித்து எச்சரிக்கை செய்து அபராதம் விதித்தனர். மேலும், மக்கள் அங்கிருந்து கலைந்து செல்வதற்கு, ரூ.6 மலிவு விலை சலுகையை இரத்து செய்து அறிவிக்க வைத்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai SS Colony Dress Shop Offer Municipal Officers Penalty to Shop Owner