தனியாக டூ-வீலரில் செல்லும் பெண்களை தள்ளிவிட்டு வழிப்பறி செய்த கொலைகார திருடன் கைது.! - Seithipunal
Seithipunal


பெண்கள் பயணம் செய்யும் வாகனத்தை குறிவைத்து, அவர்களை வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு கொள்ளையடித்து சென்ற கொலைகார திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். 

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம், வாகைகுளம் மற்றும் பெரிய கட்டளை பகுதிகளில் பெண்கள் தனியாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, அவர்களை வாகனத்தில் இருந்து தள்ளி விட்டு அவர்கள் வைத்திருக்கும் பணம் மற்றும் நகைகளை பறித்து செல்வதாக காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது. 

அடுத்தடுத்து வந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினரும் தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள பல்வேறு கண்காணிப்பு கேமிராக்களையும் சோதனை செய்துள்ளனர். 

இந்த சோதனையில் மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வந்து, தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் பெண்களை பின்தொடர்ந்து அவர்களை கீழே தள்ளிவிட்டு பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது உறுதியானது. 

இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் ராஜ்குமார் என்ற கொடூரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவனிடமிருந்து 13 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. அந்த கொலைகார திருடன் தான் என்றும் ராஜ்குமார் ஒப்புக்கொண்டுள்ளான்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Robbery Man Arrested by Police Culprit Rajkumar Went Prison


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->