8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவிற்கு பலி... மதுரையில் பெரும் சோகம்.!!
Madurai Rajaji Govt Hospital Pregnant Doctor Shanmuga Priya Died After Corona Positive
மதுரை மாநகராட்சி அனுபாண்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்த மருத்துவர் சண்முகப்பிரியா (வயது 31). இவர் 8 மாத கர்ப்பிணியாக தற்போது இருக்கிறார். கர்ப்பிணியாக இருந்த சண்முகப்பிரியா, தனது வழக்கமான பணிகளை கவனித்து வந்துள்ளார்.
மேலும், 8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் கொரோனா தடுப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் சக மருத்துவர்கள் மற்றும் அவரது உறவினர்களையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவு செய்துள்ள ட்விட்டில், " 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், கொரோனா தடுப்புப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த செய்தி பெரும் வேதனை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Rajaji Govt Hospital Pregnant Doctor Shanmuga Priya Died After Corona Positive