தங்கையின் 15 வயது தோழியை காதல் வலையில் வீழ்த்தி, பலாத்காரம் செய்த காமுகன்.. மதுரையில் பேரதிர்ச்சி.!
Madurai Palanganatham 15 Aged Child Girl Sexual Abused By Love Trap Police Arrest culprit
தங்கையின் வீட்டிற்கு வந்த தங்கையின் தோழியை காதலிப்பதாக ஏமாற்றிய காமுகன், அவரை பாலியல் பலாத்காரம் செய்து கைவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பழங்காநத்தம் நேருநகர் பகுதியை சார்ந்தவர் பூபதிராஜா (வயது 26). இவரது தங்கையின் தோழியான 15 வயது சிறுமி, பூபதி ராஜா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதன்போது, 15 வயது சிறுமிக்கும் - பூபதி ராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இந்த பழக்கமானது நட்பு ரீதியாக தொடர்ந்து வந்த நிலையில், பூபதி ராஜா சிறுமியை திட்டமிட்டு காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். இதன்பின்னர், சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்யவே, அவர் கர்ப்பமாகியுள்ளார்.
இந்த தகவலை சிறுமி பூபதிராஜாவிடம் தெரிவிக்கவே, அவர் தனது தங்கையின் திருமணம் முடிந்த பின்னர் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளான். மேலும், சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது காமுகன் பூபதி ராஜா சிறுமியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக தெரியவருகிறது. இதனால் பூபதிராஜாவின் பெற்றோரிடம் சிறுமி முறையிடவே, அவர்கள் சிறுமியை மிரட்டி இருக்கின்றனர்.
இந்த விசயத்திற்கு பூபதிராஜாவின் நண்பரான சௌந்தர பாண்டியனும் உடந்தையாக இருந்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக சிறுமி மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பூபதிராஜா, அவனின் தந்தை துரை, தாய் சுசிலா, பூபதி ராஜாவின் நண்பன் சௌந்தர பாண்டியன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பருவ வயதில் தோழியின் சகோதரன் என்று எண்ணி எப்படியான காதலில் விழுந்தாலும், அது இப்படியான விபரீதத்தை தரும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Palanganatham 15 Aged Child Girl Sexual Abused By Love Trap Police Arrest culprit