துக்கவீட்டிற்கு சென்று வந்த ரவுடிகள்.. துக்கத்தால் துவண்டுபோன கிராமம்.. அதிரவைத்த பரபரப்பு சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லிஸ் நகர் போடி லைன் பகுதியை சார்ந்தவர் வெள்ளையத்தேவர். இவரது மகன்கள் முருகன் (வயது 45), வெள்ளிக்கண்ணு செந்தில் (வயது 40). இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகளாக இருந்து வந்த நிலையில், கொள்ளை மற்றும் கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல வழக்குகள் இருக்கிறது. இதனால் இருவரின் மனைவியும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் அண்ணன், தம்பி இருவரும் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்து, தங்களது வீட்டின் முன்பு குளித்துவிட்டு இருந்துள்ளனர். இந்த நேரத்தில், அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சுற்றி வளைத்து, சரமாரியாக வெட்டி சாய்த்து சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றது. 

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில், இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்ற முயற்சிக்கையில், உறவினர்கள் அனைவரும் சேர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமபவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக அதே பகுதியை சார்ந்த முருகானந்தம், பூபதி உள்ளிட்ட 3 பேரை தற்போது வரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிரியாது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai murder case police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->