கல்லறை பகுதியில் சலசலப்பு..! எட்டிப்பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Madurai murder case police investigation
தனது இரு நண்பர்களால் 19 வயது இளைஞர் ஒருவர் குடிபோதையில் கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பகுதியின் தெற்கு தெருவில் வசித்து வந்த ஸ்ரீதர் என்பவரும், முள்ளிப்பள்ளத்தில் வசிக்கும் கே.சங்கரன்(18), எஸ்.கோபாலகிருஷ்ணன்(18) ஆகியோரும் நண்பர்களாக இருந்து வந்தனர். சோழவந்தானைச் சேர்ந்த ஒரு ஒரு தேங்காய் கமிஷன் கடையில் இவர்கள் மூவரும் வேலை பார்த்து வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, மூவரும் முள்ளிப்பள்ளம் கல்லறை பகுதியில் அமர்ந்து ஒன்றாக மது அருந்தி இருக்கின்றனர். ஸ்ரீதர் தனது நண்பர்களிடம் தன்னுடைய சொந்த செலவுகளுக்கு பணம் தேவைப்படுவதாக கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதன் பின், அவர்களுடைய செல்போனை விற்று தனக்கு பணம் தருமாறு ஸ்ரீதர் கேட்க அவர்கள் மறுத்துள்ளனர்.
இதனால், ஸ்ரீதர் எரிச்சலடைந்து அவர்களை மது பாட்டிலால் குத்தி கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட சலசலப்பில் மற்ற இருவரும் ஸ்ரீதரை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்துக்கு ஓடி இருக்கின்றனர். இதனால் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் அந்த வழியாக சென்ற ஒருவர் ஸ்ரீ தரின் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
English Summary
Madurai murder case police investigation