பள்ளி தோழியுடன் காதல்.. திருநம்பியாக மாறி வாழ்க்கையை நடத்தும் ஜோடி..! 2 வருடத்திற்கு பின்னர் கண்டுபிடிப்பு.!! - Seithipunal
Seithipunal


2 வருடத்திற்கு முன்னர் மாயமான பெண்மணி திருநம்பியாக மாறி, பள்ளி தோழியுடன் குடித்தனம் நடத்தி வருகையில் நீதிமன்ற உத்தரவால் கண்டறியப்பட்டார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பனங்காடி பகுதியை சார்ந்தவர் சரவணன். இவருக்கும், அதே பகுதியை சார்ந்த ஜெய ஸ்ரீ என்பவருக்கும், கடந்த 2018 ஆம் வருடம் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். சரவணன் - ஜெயஸ்ரீ தம்பதிகளுக்கு 2019 ஆம் வருடம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில மாதத்திற்கு பின்னர், ஜெயஸ்ரீ யாரிடமும் தகவல் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

பின்னர், குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் காணாத காரணத்தால், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

புகார் கொடுத்து ஒருவருடமாகியும் காவல் துறையினர் மனைவியை கண்டறிந்து தரவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரவணன் கடந்த வருடம் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இதனால் காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்திய நிலையில், சென்னையில் ஜெயஸ்ரீ வீடு எடுத்து தங்கியிருந்ததும், உணவகத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஜெயஸ்ரீயை பார்க்கையில், அவர் திருநம்பியாக மாறியது தெரியவந்தது. மேலும், ஜெய ஸ்ரீ தனது 12 ஆம் வகுப்பு பள்ளி தோழியான துர்கா தேவி என்ற பெண்ணுடன் இணையாக வாழ்ந்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரையும் மதுரை அழைத்து வந்த காவல் துறையினர், ஜெயஸ்ரீ குடும்பத்தினர் மற்றும் கணவர் சரவணன் குடும்பத்தினருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளார். உயர்நீதிமன்ற கிளையில் இருவரையும் ஆஜர்படுத்துகையில், " துர்கா தேவியும் - நானும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்தோம். அவருடன் சேர்ந்து வாழ விரும்பியதால் நான் திருநம்பியாக மாறினேன் " என ஜெயஸ்ரீ வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும், குடுமபத்துடன் செல்ல விருப்பமில்லை என்றும் தெரிவிக்கவே, ஜெயஸ்ரீ மேஜர் என்பதால், அவரது விருப்பப்படி அவரது வாழ்க்கையை தேர்வு செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Missing Woman Rescued by Police Now She Trans


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->