சொந்த செலவில் முகக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து காவல் அதிகாரி..!
Madurai Mattuthavani Traffic Police Inspector Gives Facemask to Peoples for Free 13 April 2021
முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவலர் தனது சொந்த செலவில் முகக்கவசம் வழங்கி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், சானிடைசரை உபயோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.
மேலும், வீடுகளுக்கு வரும் போது கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்குள் செல்ல வேண்டும் மற்றும் அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்து வருகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மூலமாக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் சிக்னலில் போக்குவரத்து காவல் அதிகாரி பழனியாண்டி, தாம்பூல தட்டில் வைத்து முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு சொந்த செலவில் முகக்கவசம் வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்..
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.
English Summary
Madurai Mattuthavani Traffic Police Inspector Gives Facemask to Peoples for Free 13 April 2021