3 மணிநேரம்... அதிரடியாக பறந்த அவசர ஊர்தி... மதுரை - ஈரோடு.! - Seithipunal
Seithipunal


மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம், ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறுநீரகம் மூன்றே மணி நேரத்தில் மதுரையில் இருந்து ஈரோட்டுக்கு அவசர ஊர்தி மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தங்கமணி. இவர் மாற்று சிறுநீரகம் வேண்டி கடந்த 2019 ஆம் வருடத்தில் தமிழ்நாடு மாற்று உறுப்பு மையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், மதுரையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் சிறுநீரகம் தானம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து தங்கமணிக்கு அதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனியார் அவசர ஊர்தி மூலமாக காவல்துறையினர் உதவியுடன் 230 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஈரோட்டிற்கு சிறுநீரகம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பின்னர் நோயாளிக்கு பொருத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai man organ implant Erode Treatment person 6 Dec 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->