கம்பிகளுக்கு நடுவே சிக்கி துடிதுடித்த உயிர்.. மதுரையில் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


ஆரப்பாளையம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்ற நபர், இரும்பு கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடி தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் அதிகாலை நேரத்தில் ஆரப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மேம்பாலத்தில் ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரியவருகிறது.

பாலத்தின் கீழே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கட்டுமான கம்பிகள் இடையே கண்ணன் விழுந்துள்ளார். இதில் வயிறு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் கம்பி சரமாரியாக இறங்கியுள்ளது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இரும்பு கம்பிகளை வெட்டி எடுத்து, கண்ணனை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை துவங்கிய நிலையில், முதற்கட்டமாக குடும்ப பிரச்சனை காரணமாக கண்ணன் தற்கொலைக்கு முயன்று உள்ளதாக தெரியவருகிறது. இந்த விசாரணை குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai man attempt suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->