லாரியின் எடையை குறைக்க சிப்.. எடை மேடையில் இரும்பு களவாணி பாய்ஸ் அட்டூழியம்..! - Seithipunal
Seithipunal


இரும்பு லோடு ஏற்றி வரும் லாரியின் எடையை குறைக்க, எடை நிலைய உரிமையாளர்களுக்கு தெரியாமல் கருவி பொருத்தி மோசடியில் ஈடுபடும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 

மதுரையில் உள்ள விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் லாரி எடைமேடை நிலையம் நடத்தி வருபவர் யோகி. இவர் தனது எடை மேடை நிலைய கருவியில், உட்புறமாக பொருத்தப்பட்டுள்ள கருவியை கண்டறிந்துள்ளார். 

இந்த கருவில் மூலமாக அதிக எடையை ஏற்றிவரும் வாகனத்தின் எடை குறைக்கப்பட்டு காண்பிக்கப்படும். இந்த கருவி எப்படி பொருத்தப்பட்டது என சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த சமயத்தில், மர்ம கும்பல் ஒன்று சிப்பை பொருத்தி சென்றது தெரியவந்தது. 

மேலும், மீண்டும் அந்த கும்பல் எடைமேடை நிலையத்திற்கு வந்து சிப்பை எடுத்து செல்ல முயற்சித்த போது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டது. இதனையடுத்து இவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கவே, 3 பேரிடம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

இவர்கள் மூவரும் இரும்பு வியாபாரிகளாக இருந்து வந்த நிலையில், இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. மேலும், இது குறித்த தகவல் பிற லாரி எடை மேடை நிலைய உரிமையாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு, எடையை குறைக்கும் வகையில் சிப் பொறுத்தப்பட்டுள்ளதா? என சோதிக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Lorry Weight Machine Weight Loss Cheating Police Arrest Gang


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->