பள்ளி மாணவியை அரிவாளால் வெட்டிய கொடூரன்.! குடும்பத்துடன் மாணவிகள் புகார்.! - Seithipunal
Seithipunal


மதுரை அருகே பள்ளி மாணவியை அரிவாளால் வெட்டிய நபர் குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவி குடும்பத்துடன் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த காண்டை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி - முருகேஸ்வரி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த குடும்பத்திற்கும் எதிர்வீட்டில் வசிக்கக்கூடிய செல்வம் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், முனியாண்டி - முருகேஸ்வரி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து,  வீட்டில் இருந்த பள்ளி மாணவிகளை தகாத வார்த்தைகளால் செல்வம் திட்டி உள்ளார். மேலும், முனியாண்டியின் இளைய மகளின் கையை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினரால் செல்வம் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஜாமீனில் வெளிவந்த செல்வம், முனியாண்டி மகள்களான பள்ளி மாணவிகளை பள்ளிக்கு செல்லும்போது, ஆபாசமான வார்தைகளாலால் பேசி, மிரட்டல் விடுத்தது வந்துள்ளார்.

இந்த நிலையில், பள்ளி மாணவிகள் தங்கள் தாய் தந்தையோடு, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரிடம் செல்வம் குறித்து புகார் அளித்துள்ளனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai karandai school girl attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->