கஞ்சா குடிக்கி கணவனால் 19 வயதில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. திடகாத்திர பெண், கை-கால் செயலிழந்த நிலையில் பரிதாபம்.!
Madurai Kalavasal 19 Aged Girl Want Govt Help to Treatment
திருமணமான சில நாட்களிலேயே குடிகார கணவனால் 19 வயது இளம்பெண் கை, கால்கள் செயலிழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியது.
மதுரை மாவட்டத்திலுள்ள எம்.கே புரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி முனியம்மாள். இந்த தம்பதிக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், கடந்த வருடம் ஜூன் மாதம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சந்தான குமார் என்பவருக்கும், மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான சந்தானகுமார், திருமணமான சில நாட்களிலேயே தனது சுய ரூபத்தை மனைவியிடம் காட்ட தொடங்கியுள்ளான். திருமணமான போது 19 வயதாக இருந்த மகாலட்சுமிக்கு, கணவனின் கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் பிடிக்காத நிலையில், மது மற்றும் கஞ்சா பழக்கத்தை கைவிடக்கோரி கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத சந்தானகுமார், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மகாலட்சுமியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், மகள் படும் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் சந்தான குமாரின் வீட்டிற்கு வந்த மகாலட்சுமியின் பெற்றோர், அவனது செயலை கண்டித்து சென்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தான குமார் அன்றைய தினத்திலேயே மதுபானம் அருந்தி விட்டு, தூங்கி கொண்டு இருந்த மகாலட்சுமியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளான். இதில் இருந்து தப்பிய மகாலட்சுமியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளான்.
மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர, சந்தான குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இந்த கொலை முயற்சி சம்பவத்தில் மூக்கிலும், காதிலும் இரத்தம் கசிந்தது துடித்த மகாலட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உயிரை மட்டுமே மருத்துவர்களால் காப்பாற்ற முடிந்த நிலையில், கை-கால்கள் மெல்ல மெல்ல செயலிழக்க தொடங்கியுள்ளது.
இதனால் தற்போது நடக்கமுடியாத நிலைக்கு மகாலட்சுமி தள்ளப்பட்டுள்ளார். மகாலட்சுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தான குமார், ஜாமீனில் வெளியே வந்த பின்னர் சில நாட்கள் மட்டும் மனைவியின் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். பின்னர் பணம் ஏதும் கொடுக்கவில்லை.
மகாலட்சுமி திருப்பூரில் நல்ல நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், தற்போது கணவனின் கொடூர செயலால் உடல் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி குழந்தையைப்போல இருக்கிறார். காலணிகள் தைக்கும் ஏழை கூலித் தொழிலாளியான மகாலட்சுமியின் தந்தை குமார், அவரின் சிகிச்சைக்கு செலவழிக்க பணம் இல்லாமல் தவித்து வருகிறார். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கான கோரிக்கையையும் வைத்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Kalavasal 19 Aged Girl Want Govt Help to Treatment