என் பொண்டாட்டி திட்டுறா... என் புருஷனும் திட்டுறான்.. கள்ளக்காதல் ஜோடியின் விபரீத முடிவு.. மதுரையில் பகீர்.!
Madurai Illegal affair Couple Suicide due to People Know about Affair
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை செங்குறிச்சி பகுதியில் திருமலைக்கேணி முருகன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் கிரிவலப்பாதையில் ஆண் மற்றும் பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது குறித்து வடமதுரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும், இந்த ஜோடி இறந்து கிடந்த இடத்திற்கு அருகேயே ரேஷன் கார்டு இருந்துள்ளது. அதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சார்ந்த ஜெயச்சந்தில் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வாடிபட்டிக்கு சென்று மேற்கொண்ட விசாரணையில், இறந்த பெண்மணி ஜெயசெந்தில் என்பவரின் மனைவி வித்யா (வயது 26) என்பதும், வாடிப்பட்டி அருகேயுள்ள தாத்தான்பட்டி பகுதியை சார்ந்த சப்பாணி என்பவரின் மகன் மணி (வயது 32) என்பதும் தெரியவந்துள்ளது. மணி சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யவும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், மணிக்கும் - வித்தியாவிற்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் மணியின் மனைவிக்கு தெரியவந்ததும் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயசெந்திலும் தனது மனைவியை கண்டித்த நிலையில், வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Illegal affair Couple Suicide due to People Know about Affair