#Breaking: மதுரை இதயம் அறக்கட்டளை நிர்வாகிகள் தமிழக - கேரள எல்லையில் கைது.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் இதயம் அறக்கட்டளை என்ற பெயரில் செயல்பட்டு வந்த காப்பதில், பிறந்த பச்சிளம் குழந்தைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ஏற்கனவே குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளன. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடந்து வந்தனர். 

இந்த நிலையில், 2 பச்சிளம் குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழவே, அதிரடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு 2 குழந்தைகளையும் மீட்டனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்கையில், இதயம் அறக்கட்டளை நிர்வாகிகள் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது அம்பலமானது. 

இந்நிலையில், மதுரை இதயம் அறக்கட்டளை காப்பகத்தின் நிர்வாகி சிவகுமார் மற்றும் ஊழியர் மதர் ஷா ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் தமிழக - கேரள எல்லையில் கைது செய்துள்ளனர். சென்னை, புதுக்கோட்டை மற்றும் தமிழக பிற மாநில எல்லைப்பகுதியில் தனிப்படை காவல் துறையினர் முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், தமிழக - கேரள எல்லையில் இருவரையும் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Idhayam Foundation Admin Sivakumar Arrest Baby Sales Illegally Complaint


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->