கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் கொரோனா உறுதியாவது ஏன்? - மதுரை அரசு மருத்துவர் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் மத்திய அரசு முதலில் கோவிட்ஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்த அனுமதி வழங்கியது. 

கொரோனா வைரஸின் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு நடிகர் விவேக் திடீரென மரணமடைந்த நிலையில், மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தவும், முதல் தவணையாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும் அச்சப்படும் சூழல் ஏற்பட்டது. மேலும், பக்கவிளைவுகள் தொடர்பான பயமும் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதிக்கு உள்ளாகினர். 

தடுப்பூசியை செலுத்திக்கொண்டதும் பெரும்பாலானோருக்கு காய்ச்சல், உடல்வலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்ட நிலையில், சில நாட்களில் அது சரியாகிவிடுகிறது. சிலருக்கு 6 நாட்களுக்கு மேல் காய்ச்சல், உடல்வலி பிரச்சனை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொரோனா சோதனை செய்தால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் மருத்துவ நிபுணர் மருத்துவர் இளம்பரிதி தெரிவிக்கையில், " கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டாள் கொரோனா வரவே வராது. தடுப்பூசி செலுத்திய சில நாட்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டால், தடுப்பூசி செலுத்தும் சில நாட்களுக்கு முன்னதாக அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கும். 

கோவிட்ஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்ட 2 மாதங்கள் கழித்து 2 ஆவது டோஸ் செலுத்த வேண்டும். கோவேக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்கள் 30 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் செலுத்தலாம். 

தடுப்பூசியை செலுத்திக்கொண்டவுடன் நோயெதிர்ப்பு சக்தி ஏற்படாது. இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்ட 30 நாட்களுக்கு பின்னரே கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி உடலில் உருவாகும். 

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா வரவே வராது என்று கூற இயலாது. கொரோனாவின் தீவிர தன்மை தடுப்பூசியின் சக்தியை குறைக்கும் பட்சத்தில், இறப்பு நிலையில் இருந்து மட்டுமே தப்பிக்கலாம். இயல்பாக தடுப்பூசி செலுத்திய 48 மணிநேரத்திற்கு காய்ச்சல், உடல் வலி போன்றவை இருக்கும். 

அதனால் பயம் கொள்ள தேவையில்லை. உடல்வலி மற்றும் காய்ச்சல் போன்ற 48 மணிநேர அறிகுறி தடுப்பூசி வேலை செய்வதை குறிக்கும். தொடர்ந்து உடல்வலி, காய்ச்சல் ஏற்பட்டால் கொரோனா சோதனை அவசியம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Govt Rajaji Hospital Doctor Explain about After Corona Vaccine Injection Issues 9 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->