நீண்ட நேரமாக குரைத்த நாய்.. தீவிரமான தீயணைப்புப்படை.! திரும்பியபோது நாய் செய்த காரியத்தால் அதிர்ச்சி.!
MADURAI DOG BARKING IN THEPPAKULAM
மதுரை தெப்பக்குளத்தில் மண்டபத்தின் ஒரு பகுதியை நோக்கியவாறு நாயொன்று நீண்ட நேரமாக குரைத்துக்கொண்டே இருந்துள்ளது. அப்பகுதி மக்கள் இதனை கண்டு குளத்திற்குள் ஏதாவது இருக்கின்றதா என்று தேடிப்பார்த்து இருக்கின்றனர். எதுவும் கிடைக்காததால் பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நாய் குரைக்கும் பகுதிக்கு ரப்பர் படகு உதவியுடன் சென்று அப்பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து நாய் குரைத்துக் கொண்டே தான் இருந்தது. ஒருவேளை நாய்க்குட்டி ஏதாவது இறந்துகிடந்ததா அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு உள்ளதா என்று ஒரு மணி நேரமாக தேடி பார்த்துள்ளனர்.
இருப்பினும் எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல நாயும் தான் குரைப்பதை நிறுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. புகாரை அலட்சியம் செய்து விடாமல் தீயணைப்பு துறையினர் மேற்கொண்ட பணியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தீயணைப்பு துறையினர் வேலை முடித்து கிளம்பியதும், வந்த வேலை முடிந்தது போல அங்கிருந்து நாய் குரைப்பதை நிறுத்திவிட்டு கிளம்பிச்சென்றது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
English Summary
MADURAI DOG BARKING IN THEPPAKULAM