தாய்போல பிள்ளையை வளர்ந்த தந்தை.. நெஞ்சை துடிக்க வைத்த சிறுமியின் கண்ணீர்.. காமுகனால் கொடூரம்.!
Madurai Culprit gives Alcohol Mixed Cool drink and sexual abused child girl
சிறுமிக்கு மதுபானம் ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த காமுகன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
மதுரை மாவட்டத்திலுள்ள சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷரூம். இவருக்கு 17 வயது மகளும், 19 வயது மகனும் உள்ளனர். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பாத ஷரூம், மனைவி இல்லாமல் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று சிறுமியின் தந்தையும், சகோதரரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், சிறுமி தோழியின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்ற 36 வயது காமுகன், இரண்டு சிறுமிகளும் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளான்.
சிறுமிகள் இருவரும் விபரீதம் புரியாமல் குளிர்பானம் என அருந்திய நிலையில், சிறுமிகளுக்கு போதை ஏறியதும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். மகளுக்காக மற்றொரு திருமணம் கூட செய்யாமல் வாழ்ந்து வந்த நபரின் மகளுக்கு அப்போது மாபெரும் கொடூரம் அரங்கேறியுள்ளது. காமுக கொடூரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
பணி முடிந்து வீட்டிற்கு வந்த தந்தை, சிறுமி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு எழுப்பவே, அவரது வாயில் மது வாடை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை என்ன ஏதுவென்று? விசாரிக்கவே, சிறுமி நடந்த விவரங்களை அழுதபடியே தெரிவித்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த தந்தை, தன் நண்பருடன் சென்று செந்தில்குமாரை பிடித்து அடித்து நொறுக்கி, மதுரை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Culprit gives Alcohol Mixed Cool drink and sexual abused child girl