சாலையில் சுற்றும் பசுக்கள் மீது சூடான எண்ணெய், ஆசிட் வீச்சு.. சமூக விரோதிகள் வெறிச்செயல்.!
Madurai Cow Acid and Heat Oil Attack 27 June 2021
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வீடுகள் மற்றும் பண்ணைகள், கோவில்களில் வளர்க்கப்படும் பசுமாடுகள், எருமைகள் போன்றவை நிறைந்திருக்கும். இதனை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாநகராட்சி, பஞ்சாயத்து சார்பாக பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் உள்ள தல்லாகுளம் பகுதியில் சாலைகளில் மாடுகள் அதிகளவு சுற்றி திரிந்துள்ளது. இவை சாலைகளில் இருக்கும் உணவுகளையும், வழிப்போக்கர்கள் வழங்கும் வாழைப்பழம், பழங்கள் போன்றவற்றையும் சாப்பிட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சமூக விரோதிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மீது ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலைகளில் சென்ற பசு, காளைகளின் மீது சூடான எண்ணெய் மற்றும் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Cow Acid and Heat Oil Attack 27 June 2021