அம்மா மினி கிளினிக் பணியாட்கள் நியமன விவகாரம்... தமிழக அரசுக்கு மதுரை கிளை உத்தரவு.!
Madurai Court Order TN Govt About Amma Clinic Vacancy
மதுரையை சார்ந்த வழக்கறிஞர் வைணவசுந்தர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இது குறித்த மனுவில், தமிழக அரசின் மினி கிளினிக் அரசாணையில் 2 ஆயிரம் மருத்துவமனைகளில் பணியாற்ற இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் தொடர்பான தகவல் இருந்தது.
இதில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனத்தில் தனியார் ஏஜென்சி நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த ஆயுதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏஜென்சி வாயிலான பணி நியமனத்தை இரத்து செய்ய வேண்டும்.
தனியார் ஏஜென்சி மூலமாக பணியாட்கள் நியமனம் செய்யப்பட்டால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள், சுழற்சி முறையில் பணிகள் வழங்குதல் தொடர்பான விவகாரத்தில் பாதிப்பு ஏற்படும் " என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், மினி கிளினிக்கில் ஆட்கள் தேர்வு செய்யும் முறையில், தற்போது உள்ள முறையே தொடர வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனத்தில் தனியார் ஏஜென்சி மூலமாக ஆட்கள் நியமனம் செய்யப்படும் உத்தரக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் " என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை திங்கட்கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Court Order TN Govt About Amma Clinic Vacancy