விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்... மதுரை நீதிமன்ற நீதிபதிகள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு அமலாகி, ஐந்தாவது முறையாக தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்கு தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விவசாய பணிகளுக்கு இரண்டாவது ஊரடங்கு நீட்டிப்பிலேயே தளர்வுகளுடன் அனுமதி வழங்கி, விவசாய பணிகள் அனைத்தும் துவங்கப்பட்டது. இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த ரத்தினம் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், விவசாயிகளை துன்புறுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, அவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், பறிமுதல் செய்யப்பட்ட விவசாயிகளின் வாகனம் மற்றும் நெல் மூட்டைகளையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai court judge speech positive for former


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->