சி.பி.சி.ஐ.டி காவல்துறையின் அதிரடி நடவடிக்கை.. நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த நீதிபதிகள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் செல்போன்கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெண்ணிக்ஸ் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டனர். இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்து பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியது. மேலும், இருவரின் இழப்பிற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மதுரை நீதிமன்றம் விசாரணை செய்து வந்த நிலையில், காவல் துறை அதிகாரிகள் ஒருமித்த கருத்தால் நீதிபதியை அவதூறு பேசி சர்ச்சையை அதிகரித்தனர். இதனை விசாரணை வாக்குமூலத்தில் நீதிபதியும் குறித்துக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி காவல் துறை அதிகாரிகள், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகளான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவல் அதிகாரிகள் முருகன் என மொத்தமாக ஐந்து பேரை தற்போது வரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், 24 மணிநேரத்தில் சாத்தான்குளம் வழக்கில் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் எடுத்துள்ள நடவடிக்கை மகிழ்ச்சியை அளிக்கிறது. இனியொரு சம்பவம் இது போன்று நடக்க கூடாது. தமிழக மக்களின் நம்பிக்கையை சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர் என்று மதுரை நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஒத்திவைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், காவல் துறை அதிகாரிகளுக்கு இருக்கும் மன உளைச்சலை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதிகள் காவல் துறை அதிகாரிகளுக்கு கேள்விகளை முன்வைத்தனர். காவல் துறையினருக்கு பணிசுமையின் காரணமாக, அவர்களுக்கு மன அழுத்தம் இயல்பாகவே ஏற்படும் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai court judge says congrats of CBCID action Sathankulam murder case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->