சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அரசுக்கு என்ன தயக்கம்?... மதுரை நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி.!
Madurai court Judge Raise question to State and Central Govt about Siddha Medicine
கபசுரக் குடிநீர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவை எந்த பரிசோதனை அடிப்படையில் மக்களுக்கு வழங்குகிறார்கள்?
அங்கீகரித்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறையானது இருக்கிறது?. ஆங்கில மருத்துவம் லாபி என்பது இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர் கண்டுபிடித்த மருந்தை, இதுவரை பரிசோதனை செய்யாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்துகளை பரிசோதனைகள் என்ன தயக்கம்? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai court Judge Raise question to State and Central Govt about Siddha Medicine