தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை இல்லை - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.!
Madurai Court Bench Dismiss Appeal about Cancel Election Campaign due to Corona
அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்க இயலாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.
மதுரையை சார்ந்த ரமேஷ் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்த மனுவில், " கொரோனா பரவல் அச்சம் மற்றும் இரண்டாம் பரவல் அச்சம் தற்போது உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இரண்டாம் கொரோனா பரவல் வைரஸ் உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த மனு நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வரவே, " கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்க இயலாது " என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Court Bench Dismiss Appeal about Cancel Election Campaign due to Corona