கைக்குழந்தையுடன் பெட்ரோல் குடித்து ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி - மதுரையில் பரபரப்பு.!
Madurai Collector Office Woman Suicide Attempt with Baby 15 Sep 2021
ஆட்சியர் அலுவலகத்தில் பெண்மணி பெட்ரோல் குடித்து தற்கொலைக்கு முயன்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியை சார்ந்தவர் ஹாஜி பானு (வயது 25). இவர் இன்று தனது கைக்குழந்தையுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காலையில் வந்தார். இதன்போது, கையில் பையொன்றை கொண்டு வந்துள்ளார்.
அதிகாரிகள் கைக்குழந்தையுடன் வந்ததால் குழந்தையின் உடை சில வைத்திருக்கலாம் என்று எண்ணிய நிலையில், பையில் பாட்டிலில் ஊற்றி கொண்டு வரப்பட்ட பெட்ரோலை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றி, தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், ஹாஜி பானுவுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது என்பது தெரியவந்தது.
மேலும், கணவர் தொடர்ந்து தன்னிடம் தகராறு செய்து வருவதால், வேறு வழியின்றி தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Collector Office Woman Suicide Attempt with Baby 15 Sep 2021