சிறுமியின் ஆசையை அன்போடு உடனடியாக நிறைவேற்றி வாழ்த்திய மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர்..!
Madurai Collector Fulfilled the little girl wish 25 June 2021
மதுரை மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி நகரை சார்ந்தவர் சோனா. இவரது கணவர் தனுஷ் தீபன். இவர்கள் இருவருக்கும் ௯ வயதுடைய டீடா தீபன் என்ற மகள் இருக்கிறார். தனுஷ் தீபன் பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனுஷ் தீபன் உயிரிழக்கவே, கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு நிதிஉதவி அளிக்கிறது. இந்த விண்ணப்பத்தை பெற சோனா தனது மகள் டீடாவுடன் மதுரை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது, சிறுமி டீடாவுக்கு மாவட்ட ஆட்சி அறையினை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படவே, இந்த விஷயத்தை அங்கிருந்த மாவட்ட குழந்தைகள் நல உறுப்பினர்கள் பாண்டிய ராஜா, சண்முகம் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் நல அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் இதனை தெரிவித்து கோரிக்கை வைக்கவே, மாவட்ட ஆட்சியர் அனீஷும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, தாயும் - மகளும் மாவட்ட ஆட்சியர் அறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது, சிறுமி டீடா மாவட்ட ஆட்சியரை நோக்கி, " ஆட்சியர் அலுவலகத்தில் உங்களது பணி திருப்தியாக இருக்கிறதா? பல நெருக்கடியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? " என்று கேள்வி எழுப்பினார். சிரித்துக்கொண்டே பதிலளித்த மாவட்ட ஆட்சியரிடம், எதிர்காலத்தில் நானும் உங்களை போல ஆட்சியர் ஆகுவேன் என்று தெரிவித்தார்.
இதனைக்கேட்டு பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகிய மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், " நீங்களும் மதுரை ஆட்சியராக வர வேண்டும். அப்போது நான் உங்களை சந்திக்க வேண்டும் " என்று தெரிவித்தார். இதன்பின்னர் சோனாவும், டீடாவும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Collector Fulfilled the little girl wish 25 June 2021