மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த மாமா, தாத்தா.. உடந்தையாக தாய்.. மதுரையில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியை அடுத்துள்ள தனக்கன்குளம் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). இவருக்கு ஒரு மகளும், பாலா என்ற 32 வயதுடைய மகனும் இருக்கின்றனர். கிருஷ்ணனின் மகள் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக, அதே பகுதியை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

இவர்கள் இருவருக்கும் மூன்றரை வயதுடைய பெண் குழந்தை உள்ள நிலையில், தனது குழந்தையுடன் பெண்மணி தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலயில், கடத்த சில நாட்களாகவே, மூன்றரை வயது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இந்த விஷயம் குறித்து விசாரிக்கையில், பச்சிளம் குழந்தை அவரது தாத்தா கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பாலாவை கைகாட்டியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியாகியுள்ளது. 

மேலும், சிறுமி இது குறித்து தாயிடம் தெரிவிக்கையில், தாயும் தனது தந்தை மற்றும் சகோதரரை கண்டிக்காது, இது குறித்து வெளியே கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு பின்னர் சிறுமியின் தாத்தா கிருஷ்ணன், தாய்மாமா பாலா, சிறுமியின் தாயாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai child sexual torture police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->