'அந்த இடத்துல வலிக்குது' தாத்தா செய்த காரியத்தால், பெற்றோரிடம் கதறிய சிறுமி.!
Madurai child sexual abuse police investigation
சிறுமி ஒருவரை 58 வயது முதியவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
ஜஹாங்கீர் என்ற அந்த முதியவர் மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் வசித்து வருகின்றார். காவல்துறை அளித்த தகவலின்படி பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஜஹாங்கீரின் பேத்தி உடைய தோழி என்பது தெரியவந்துள்ளது. சென்ற வாரத்தில் அந்த சிறுமியை ஜஹாங்கீர் தன்னுடைய பேத்தியை பார்க்க அழைத்துச் செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டு வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஜஹாங்கீர் ஈடுபட்டு உள்ளார். அதன் பின்னர் அந்த சிறுமியை அவருடைய வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்த சிறுமி பயத்தில் இதுகுறித்து தன்னுடைய வீட்டில் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து பலமுறை நடைபெற்றுள்ளது.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத சிறுமி தனக்கு அந்த இடத்தில் வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்து இருக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் அந்த முதியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Madurai child sexual abuse police investigation