மதுரை: 16 வயது சிறுமியிடம் 600 பேர் பாலியல் அத்துமீறல்.. பச்சிளம் உடல் மூதாட்டி போல தளர்ந்ததாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்.!
Madurai Child Sexual Abuse Forced Prostitution Case Update 25 December 2020
மதுரை மாவட்டத்திலுள்ள கோரிப்பாளையம் பகுதியைச் சார்ந்த பெற்றோரை இழந்த சிறுமி, ஜெயலட்சுமி என்ற உறவினரிடம் வளர்ந்து வந்துள்ளார். ஜெயலட்சுமி ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று கூறப்படுகிறது.
இவரிடம் வளர்ந்த 13 வயது சிறுமி பருவம் அடைந்த நிலையில், சிறுமி என்றும் பாராது பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். அந்த வகையில், கடந்த மூன்று வருடங்களில் 600 க்கும் மேற்பட்டவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
சிறுமியை வெளியூர் பயணத்திற்கும் அனுப்பி வைத்த ஜெயலட்சுமி பணம் சம்பாதித்து வந்த நிலையில், இந்த விஷயத்திற்கு புரோக்கர்களாக அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், சரவண பிரபு ஆகியோர் இருந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் சின்னத்தம்பி என்பவன், சிறுமியை வாடிக்கையாளரின் இடத்திற்கு கொண்டு விட உதவி செய்து வந்துள்ளான்.
இந்த நிலையில், மதுரை உத்தங்குடி அருகேயுள்ள வி.ஐ.பி நகர் பகுதியில் உள்ள வீட்டில், சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக விபசார தடுப்பு பிரிவு ஆய்வாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்படையினர் அங்கு சென்று சோதனை செய்கையில், வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு உள்ளனர்.
மேலும், வீட்டில் இருந்த புரோக்கர் சரவண பிரபுவையும் கைது செய்த நிலையில், இவனது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயலட்சுமி, அனார்கலி, சுமதி, தங்கம், சந்திரா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆட்டோ ஓட்டுநர் சாமர்த்தியமாக தப்பித்த நிலையில், அவனையும் கைது செய்துள்ளனர். தற்போது வரை 600-க்கும் மேற்பட்டவர்கள் சிறுமியை சீரழித்தது உறுதியாகியுள்ள நிலையில், பேரதிர்ச்சி தகவல் விசாரணையில் வெளியாகியுள்ளது.
இந்த விசாரணையில், 13 வயதில் இருந்து சிறுமியை இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து 600 க்கும் மேற்பட்ட நபர்களிடம் வாடகைக்கு அனுப்பியது தெரியவந்துள்ள நிலையில், ஓட்டுநர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை சிறுமியிடம் அத்துமீறியுள்ளனர். மேலும், நபருக்கு ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணமும் பெற்றுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் கடுமையான பாலியல் அத்துமீறல் காரணமாக, 16 வயது சிறுமியின் உடல் நிலை 70 வயது மூதாட்டி போல தளர்வடைந்து உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Child Sexual Abuse Forced Prostitution Case Update 25 December 2020