கரோனாவால் முடங்கிய தொழில்.. கழுத்தை நெரித்த கடன்.. விஷமருந்தி உயிர் புரியாததால் எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள கரிமேடு யோகானந்த சுவாமி மடம் பகுதியை சார்ந்தவர் இளங்கோவன் (வயது 55). இவர் மதிமுகவில் நிர்வாகியாக இருக்கும் நிலையில், இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். 

இளங்கோவன் பொன்மணி பகுதியில் அச்சக நிறுவனம் நடத்தி வந்த நிலையில், தொழிலை மேம்படுத்த சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். தற்போது காரோனா ஊரடங்கு காரணமாக தொழிலை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தொழில் முடக்கம் காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான மன வேதனையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினத்தின் போது அலுவலகத்திற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற நிலையில், இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இந்த சமயத்தில், இளங்கோவன் ரத்த வெள்ளத்தில் இழந்து கிடந்துள்ளார். 

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அங்குள்ள கண்காணிப்பு காமிராவை சோதனை செய்த சமயத்திலேயே, இளங்கோவனின் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் இளங்கோவன் மரணத்திற்கு முன்னதாக, " தொழிலில் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்றும், தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் கூறியுள்ளார். விஷம் அருந்தியும் உயிர் பிரியாத சூழலில், கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Business man suicide due to loss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->