17 வயது சிறுமி உடலில் 13 இடத்தில் கத்திக்குத்து.. கண்மாய் பகுதியில் பிணமாக மீட்பு.. மதுரையில் பேரதிர்ச்சி.!!
Madurai Ammapatti 17 year old girl murder police investigation
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் டி.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வி.அம்மாபட்டி பகுதியை சார்ந்தவர் தவுடன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்கள் இருவருக்கும் ஜெய்சக்தி பாலா (வயது 17) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 7 மாதத்திற்கு முன்னதாகவே ஜெய்சக்தி பாலாவிற்கும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மத்திய சேவை பகுதியை சார்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த திருமணம் தொடர்பான தகவலை அறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, 18 வயது பூர்த்தியானவுடன் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று ஜெயசக்தியை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், ஜெய்சக்தி பாலா நேற்று இரவு அங்குள்ள கண்மாய் பகுதிக்கு சென்ற நிலையில், வெகு நேரமாகும் வீட்டிற்கு திரும்பவில்லை.
இரவு முழுவதும் தேடியும் ஜெய்சக்தி கிடைக்காத நிலையில், மறுநாள் காலையில் இரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்கொண்ட விசாரணையில், அவரது உடலில் 13 இடங்களில் கத்திக்குத்து இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இவரது உடல் அருகேயே ஹெட்செட் இருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. சிறுமி உடலில் 13 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Ammapatti 17 year old girl murder police investigation