#JustIN: மதுரை: கண்மாய்க்குள் கார் பாய்ந்து விபத்து.. 2 பேர் பலி., 3 பேர் படுகாயம்.!
Madurai Alanganallur Car Crash on Pond 2 Died 3 Injured
அதிவேகத்தில் பயணம் செய்த கார் கண்மாய்க்குள் பாய்ந்து ஏற்பட்ட வித்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் செல்லூர் பகுதியை சார்ந்தவர் அரவிந்த் (வயது 27), சித்திக் (வயது 25). இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமையான இன்று அரவிந்த் மற்றும் சித்திக், தங்களின் பிற 3 நண்பர்களுடன் வெளியே சென்று வரலாம் என திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து, நண்பர்கள் 5 பேரும் காரில் புறப்பட்டு சென்ற நிலையில், இவர்களின் கார் அலங்காநல்லூர் அருகேயுள்ள அச்சம்பட்டி கண்மாய் பகுதிக்கு அருகே சென்றுள்ளது. இதன்போது, வாகனம் அதிவேகத்தில் சென்றதாக தெரியவருகிறது.
அதிவேகத்தில் பயணம் செய்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழக்கவே, கார் அதிவேகத்துடன் கண்மாய்க்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த அரவிந்த் மற்றும் சித்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேலும், வாகனத்தில் இருந்த 3 பேர் படுகாயத்துடன் அலறித்துடித்துள்ளனர். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், காரில் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அரவிந்த் மற்றும் சித்திக்கின் உடலை மீட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Alanganallur Car Crash on Pond 2 Died 3 Injured