அரசு பேருந்து மோதி, மகன் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த தந்தை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர் பல்கலை. உடற்பயிற்சி படித்து வருபவர் சதீஷ்குமார். இவர் தனது சொந்த ஊரான அடிக்கம்பட்டி பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்றுள்ளார். இரண்டு இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு புறப்பட்ட நிலையில், சதீஷின் தந்தை கணேசன் (வயது 55) மற்றும் அவரது தாயார் ஒரு வாகனத்திலும், சதீஷ் மற்றொரு வாகனத்திலும் வந்துள்ளார்.

இந்த நிலையில், கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக அங்குள்ள அச்சம்பத்து அருகே பெட்ரோல் நிலையத்திற்கு செல்ல முயன்ற நிலையில், மதுரையில் இருந்து தேவாரம் நோக்கி பயணம் செய்த அரசு பேருந்து அதிவேகத்தில் இரு சக்கர வாகனத்தில் மோதியது. 

இதில் வாகனம் தூக்கி வீசப்பட்ட நிலையில், கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். கணேசனின் மனைவிக்கு கைகள் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கணேசனின் மனைவி சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். கணேசனின் உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து ஓட்டுனரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மகனின் கண் முன்னே தந்தை இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Accident man died police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->