கண்மாயில் பிணமாக மீட்கப்பட்ட 18 வயது பெண்மணி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. விசாரணையில் அதிர்ந்துபோன காவல்துறை.!!
Madurai 18 year old girl murder case police arrest 3 culprits including Husband
மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வி.அம்மாபட்டி கிராமத்தை சார்ந்தவர் தவிடன். இவரது மகள் ஜெய்சக்தி பாலா (வயது 18). விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மத்தியசேனை பகுதியை சார்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 20). இவர்கள் இருவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரும் திருமணத்தின் போது மைனர் என்பதால், குழந்தைகள் நல அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தம்பதிகளை அவரவரின் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 மாதமாக பெற்றோரின் இல்லத்தில் இருந்து வந்த ஜெய்சக்தி, கடந்த 12 ஆம் தேதி அம்மாபட்டி பகுதியில் உள்ள கண்மாயில் பிணமாக இருந்துள்ளார். இவரது உடலை மீட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கணவர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.
இந்த விசாரணையில், ஜெய்சக்தி பாலா முகநூல் மற்றும் வாட்சாப் செயலி மூலமாக ஆண் நண்பர்களுடன் பேசி வந்த நிலையில், தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பலமுறை ஜெயசக்தியை முத்துப்பாண்டி சமாதானம் செய்தும் பலனில்லை. பின்னர் வி.அம்மாபட்டி பகுதியிலேயே வீடெடுத்து தம்பதிகளை தங்க வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளார். இந்த சூழலில், கணவனுக்கு - மனைவியின் மீது கொண்ட சந்தேகம் தீரவில்லை.
இதனால் தனது நண்பர்களான கண்ணன் (வயது 17), கணேசன் (வயது 17) இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது), ஆகியோருடன் சேர்த்து மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு, திட்டப்படி அம்மாபட்டி கண்மாய் பகுதிக்கு மனைவியை வரவழைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai 18 year old girl murder case police arrest 3 culprits including Husband