காருக்குள் சடலமாக கிடந்த இளம் காதல் ஜோடி! விசாரணையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது! - Seithipunal
Seithipunal


சேலம் செவ்வாய்பேட்டை சாய்பாபா காலனியை சேர்ந்வர் சுரேஷ், இவர் தனது தந்தையுடன் இணைந்து வெள்ளிப்பட்டறை தொழில் செய்து வந்தார். 

இந்நிலையில,  நேற்று காலை வெளியில் சென்ற சுரேஷ் இரவு வரை வீடு திரும்பவில்லை, அவரது செல் போனையும்  சுவிட்ச் ஆப் வைத்திருந்ததால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் சுரேஷ் நண்பர்களுடன் சேர்ந்து தேடியுள்ளனர்.

இதையடுத்து, நள்ளிரவில் 12 மணி அளவில் சுரேஷின்  நண்பர்கள் சற்று தொலைவில் உள்ள அவரது கார் ஷெட்டின் கதவு லேசாகத் திறந்திருப்பதைக் பார்த்தனர் இதையடுத்து அங்கு சென்று தேடிய போது காருக்குள் சுரேஷ் ஒரு பெண்ணுடன் சடலமாக கிடந்தார்.  இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்துறையினர் காரில் இருந்த இருவரின் சடலங்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

சுரேஷுடன் சடலமாக கிடந்த பெண்  சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வரும் ஜோதிகா என்பதும், இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் என்பதும் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனக் கருதிய இருவரும் வெள்ளிப்பட்டறையில் பயன்படுத்தப்படும் சயனைடை  சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lovers sucide in car


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->